Wednesday, April 29, 2009

ஆம் நாங்கள் தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரனாப் முகர்ஜி





கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும் , தமிழக அரசியல் வாதிகள் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான a.k அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை , என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்த படி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா , சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.

இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரனாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிங்கள ஆரசாங்கம் எங்களது நன்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுருத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயித உதவிகள் வழங்கி வந்தோம்.இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயிதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்கு ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரைவழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கம் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிரநடவடிக்கைகளின் ஏன் ஈடுபடக்கூடாது இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரனாப் முகர்சி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

Tuesday, January 13, 2009

அனைவருக்கும் தமி்ழ்ப் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள்




புதுப்பிக்கும் நாள்
-
நகரத்து பொங்கலில் நாட்டமில்லை.

தகரத்தில் பெய்த மழை போல்தடதடவென முடிகிறது.

அனைவரும் வருகிறார் அனுமதி விடுப்பில்.

பரபரவென்றே பார்க்கிறார் வேலைகள்.

சோப்புநீர் போட்டு கழுவிய தரைகள்.

விம் பவுடர் தொட்டு விளக்கிய கேஸ் ஸ்டவ்இரண்டு கரும்புகள், இஞ்சி மஞ்சள்மருந்துபோல் வாங்கிய வாழைச் சீப்பு.

அரைக்கிலோ அரிசி வாசனைப் பொருட்கள்வைத்துத்திரும்பிய சில நொடிக்குள்ளேயேவிசிலடித்து அழைக்கும் குக்கர் பொங்கல்கிண்ணமும் ஸ்பூனும் கைகளில் ஏந்திஎண்ணம் முழுதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்எல்லோர் செல்லிலும் எஸ்எம்எஸ் வாழ்த்துக்கள்வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல்எல்லாம் நடக்குது அவசர கதியில்.எந்திர வாழ்க்கையின் கொடைகள் விழாக்கள்.

துருப்பிடித்த நாளை துலக்கும் பொடிகள்.

கிராமத்து பொங்கலில்தான் கிறுகிறுப்பதிகம்மராமத்து பார்த்த மண்வீடுகள் கூடமணப்பெண் போலவே கவர்ச்சியாய் தெரியும்.கரும்புக் கட்டுகள், கலர்ப்பொடி கோலங்கள்.

வரிசை தட்டுகள்,வாழைத்தார்கள்.

எமனின் வயிற்றை எடுத்துவந்தது போல்எல்லோர் வீட்டிலும் பரங்கிக்காய்கள்.

மஞ்சள் கொத்துக்கள் மகிழ்ச்சிப் பாடல்கள்வஞ்சகமில்லா வாழ்த்துக் குரல்கள்.

பரணில் கிடந்த பானையை இறக்கிபளபளவென்றே புளியால் துலக்கிஅரிசி, வெல்லம், ஏலம், முந்திரிஅதன்மேல் நெய்மழை திராட்சைத் தூவல்.

பொங்கி வருகையில் குலவை சத்தம்அம்மா வைத்த சர்க்கரை பொங்கல்அடிநாக்கு வரையிலும் ஒட்டிக் கிடக்கும்.

மாட்டுப் பொங்கல், மஞ்சு விரட்டுமைதானத்தில் ஊர்மக்கள் கூடிபேதமறந்த ஆட்டம் பாட்டம்.

கூட்டுப் புழுவாய் தவிக்கும் மனிதர்கள்!பட்டாம் பூச்சியாய் பரிணாமம் பெறுங்கள்.விழா நாள் என்பது வெறும் நாள் அல்ல.

அலுத்துச் சலிக்கும் அழுக்கான வாழ்வைபுதுப்பிக்கும் நாளென புரிந்து கொள்ளுங்கள்.


- நன்றி தீக்கதிர்