Wednesday, April 29, 2009
ஆம் நாங்கள் தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரனாப் முகர்ஜி
கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும் , தமிழக அரசியல் வாதிகள் கூறிவந்தனர்.
ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான a.k அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை , என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.
இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்த படி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா , சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.
இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரனாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
சிங்கள ஆரசாங்கம் எங்களது நன்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுருத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயித உதவிகள் வழங்கி வந்தோம்.இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயிதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்கு ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரைவழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கம் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிரநடவடிக்கைகளின் ஏன் ஈடுபடக்கூடாது இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரனாப் முகர்சி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.
Tuesday, January 13, 2009
அனைவருக்கும் தமி்ழ்ப் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள்
புதுப்பிக்கும் நாள்
-
நகரத்து பொங்கலில் நாட்டமில்லை.
தகரத்தில் பெய்த மழை போல்தடதடவென முடிகிறது.
அனைவரும் வருகிறார் அனுமதி விடுப்பில்.
பரபரவென்றே பார்க்கிறார் வேலைகள்.
சோப்புநீர் போட்டு கழுவிய தரைகள்.
விம் பவுடர் தொட்டு விளக்கிய கேஸ் ஸ்டவ்இரண்டு கரும்புகள், இஞ்சி மஞ்சள்மருந்துபோல் வாங்கிய வாழைச் சீப்பு.
அரைக்கிலோ அரிசி வாசனைப் பொருட்கள்வைத்துத்திரும்பிய சில நொடிக்குள்ளேயேவிசிலடித்து அழைக்கும் குக்கர் பொங்கல்கிண்ணமும் ஸ்பூனும் கைகளில் ஏந்திஎண்ணம் முழுதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்எல்லோர் செல்லிலும் எஸ்எம்எஸ் வாழ்த்துக்கள்வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல்எல்லாம் நடக்குது அவசர கதியில்.எந்திர வாழ்க்கையின் கொடைகள் விழாக்கள்.
துருப்பிடித்த நாளை துலக்கும் பொடிகள்.
கிராமத்து பொங்கலில்தான் கிறுகிறுப்பதிகம்மராமத்து பார்த்த மண்வீடுகள் கூடமணப்பெண் போலவே கவர்ச்சியாய் தெரியும்.கரும்புக் கட்டுகள், கலர்ப்பொடி கோலங்கள்.
வரிசை தட்டுகள்,வாழைத்தார்கள்.
எமனின் வயிற்றை எடுத்துவந்தது போல்எல்லோர் வீட்டிலும் பரங்கிக்காய்கள்.
மஞ்சள் கொத்துக்கள் மகிழ்ச்சிப் பாடல்கள்வஞ்சகமில்லா வாழ்த்துக் குரல்கள்.
பரணில் கிடந்த பானையை இறக்கிபளபளவென்றே புளியால் துலக்கிஅரிசி, வெல்லம், ஏலம், முந்திரிஅதன்மேல் நெய்மழை திராட்சைத் தூவல்.
பொங்கி வருகையில் குலவை சத்தம்அம்மா வைத்த சர்க்கரை பொங்கல்அடிநாக்கு வரையிலும் ஒட்டிக் கிடக்கும்.
மாட்டுப் பொங்கல், மஞ்சு விரட்டுமைதானத்தில் ஊர்மக்கள் கூடிபேதமறந்த ஆட்டம் பாட்டம்.
கூட்டுப் புழுவாய் தவிக்கும் மனிதர்கள்!பட்டாம் பூச்சியாய் பரிணாமம் பெறுங்கள்.விழா நாள் என்பது வெறும் நாள் அல்ல.
அலுத்துச் சலிக்கும் அழுக்கான வாழ்வைபுதுப்பிக்கும் நாளென புரிந்து கொள்ளுங்கள்.
- நன்றி தீக்கதிர்
Tuesday, December 23, 2008
இன்று தந்தை பெரியார் நினைவு நாள்
பெரியார் மேடையில் பேசிய சில துளி...
நான் யார்?
எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்ப-மாகும்; குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்-பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்-களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்-படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் - நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்-பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளி-யேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது - அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்-தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்ட-வர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.
(கான்பூரில் 29, 30, 31.12.1944இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.1.1945)
நான் எப்படி?
நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவை-களால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடிய-வைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.
(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)
சொல்வது கட்டளையா?
நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்தது-மானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடு-வீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்-தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மை-யென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.
(விடுதலை, கட்டுரை 8.10.1951)
என் துணிவு
நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடு-கின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ள-வர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்-கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்பு-க்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.
(சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960)
நான் ஒரு தொண்டன்
நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டி-லேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டு-கோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனே யொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.
(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)