Wednesday, August 27, 2008
ஆளுமை என்னும் முகமூடி
நடிகவேள் எம்.ஆர். இராதா - கவிஞர் நந்தலாலா
நடிகவேள் எம்.ஆர். இராதாவுக்கும், திருச்சிக்கும் ஏகப்பட்ட தொடர்பு உண்டு. தமிழக நாடக வரலாற்றில், ஒரு நாடகம் சற்றொப்ப 3500 முறை நடத்தப்பட்டது என்றால் அது எம்.ஆர். இராதாவின் இரத்தக் கண்ணீர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, அது நாடகமாக வந்து, திரைப்படமாக வந்த பிறகும், அது நாடகமாக நடிக்கப்பட்டது.Tuesday, August 26, 2008
பெரியார் பார்வையில் இந்தியப் பொருளாதாரம்
தந்தை பெரியார் இந்தியப் பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்-தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம், காசு கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு பண்டத்தைக் கொடுத்து, மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்வார்கள். கூலியாட்கள், கைத்தொழில் செய்வோர், ஏவலாள் ஆகியோருக்கும் தானியமே கொடுப்-பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் - பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக ஏதும் கொடுப்பதில்லை.அறிந்து கொள்ளுங்கள்

குழந்தைகளின் உரிமைகள்
புரட்சிக்கவிஞர் சொன்ன கதை
பெரியவர் ஒருவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் கொண்டு வழிப் பயணம் போனார். காலில் கல் தடுக்கி சிறுவன் கீழே விழுந்து விட்டான். எழுந்த அவன், எரிச்சலுடன் கல்லை எடுத்து வீசி எறிந்தான். பெரியவர் குனிந்து கல்லை எடுத்துப் பார்த்தார்.பிடல்காஸ்ட்ரோ

1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு.
1945-50 - அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.
1952 - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.
1953 - சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.
1955 - சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.
1956 திசம்பர் 2 - கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.
1959 - காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.
1960 - குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.
1061 - அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.
1962 - கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.
1976 - கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.
1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.
1980 - அகதி நெருக்கடி - சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.
1991 - சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை
1993 - கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.
1996 - கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.
2000 - ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!
2002 – ‘தீய நாடுகளின்' அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.
2006 - சூலை - அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.
2008 - பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.
Monday, August 25, 2008
சார்லி சாப்ளின் நடித்து முதல் சினிமா

மாவோவின் நீண்ட பயணம்
ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றிய நேரம். சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் அசுர வளர்ச்சி அடைந்து வந்தனர். கம்யூனிஸ்டுகளை ஒடுக்கினால் தான் தான் ஆட்சி செய்ய முடியும் என்று நினைத்த ஆட்சியாளன் ஷியாங் கட்சியைத் தடை செய்தான். கம்யூனிஸ்டுகளை நாட்டை விட்டே விரட்டினான். தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் செய்த புரட்சிகள் தோல்வியடைந்தன. இதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு மகத்தான மனிதன் அங்கே வர வேண்டியிருந்தது.Saturday, August 23, 2008
கவிதை 2 ( பாவேந்தர் )

கந்தக கல்வெட்டுக்கள்
இறப்பும்.. பிறப்பும்...
ஒரே மாதத்தில்
ஏந்திக் கொண்ட
எங்களின் வேந்தர்
பாவேந்தர்.
மரபும்... புதுமையும்..
இவரது எழுத்தில்
உயிர்பெற்று உலாவிய
உதாரணங்கள்
ஏராளம்...
தமிழனுக்கும்...
தமிழுக்கும்...
தமிழ்
மண்ணுக்கும்...
பாவேந்தர்
சொல்லிய வரிகள்
வெந்தணல்.... செந்தணல்
வெடித்த பெருந்தணல்.
மண் விடுதலை
பெண் விடுதலை
பாவேந்தரின்
உயிர் மூச்சென
செயல் பேச்சென
ஏடு சொல்லும்
எழுத்து சொல்லும்.
அன்று மட்டுமல்ல
இன்றும்
சிலிர்க்கின்றன
பாவலரின் பாடல்கள்
தமிழ்ப்பாடங்களின்
பக்கமெல்லாம்...
விடியலைச் சொல்லும்
கந்தக
கல்வெட்டுக்கள்
Friday, August 22, 2008
கவிதை 1 (அம்பேத்கர் )
இருட்டைத் துடைக்கும் எழுஞாயிறு
அம்பேத்கர்!
நம்பிக்கையே
மூலதனமாக
திறமையே
வாழ்வான
கல்விக் கடல்,
கால்சட்டை பருவத்திலேயே
தீண்டாமை தீண்டிய
தழும்புகளோடு
வீரம் சமைத்த வீரம்,
அவரின் எழுதுகோல்
எழுதியவை
சட்டங்களை மட்டுமல்ல
உழைக்கும் மக்களின்
வாழ்க்கை திட்டங்களையும் தான்,
ஆதிக்க வெப்பத்தின்
இறுக்கிய சங்கிகளோடு
இழிவுகளைத்
துடைத்தெழுந்த
விடியல்,
பெரியாரோடு கைகோர்த்த
இவரின் கனவுகள்
மெல்ல... மெல்ல...
நனவாய் விரிகின்றன.
நம் நிலமெங்கும்.
வறுமை, வேதனை
அவமானம், படுதோல்வி
அடிமை, கொடுமை
இத்தனையையும்
எட்டி உதைத்தது
மேதையின் கல்வி
இன்றல்ல
என்றும் வாழ்வார்
வாழ்க்கைப் பக்கங்களில்
உனக்கும் எனக்குமான
இருட்டைத் துடைக்கும்
எழுஞாயிறு...




